கன்னியாகுமரியில் விசில் ஊதியவாறு சைக்கிள் ஓட்டிய விஜய்!
தேர்தல் பிரசாரத்தின்போது மீண்டும் சைக்கிள் ஓட்டி விஜய் வாக்கு சேகரித்தது குறித்து...
கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காரைக்குடியில் சைக்கிள் ஓட்டியதைப்போன்று இம்முறையும் சைக்கிள் ஓட்டி வாக்கு சேகரித்தார்.
காரைக்குடியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் ஆனதால், பேசாமல் கையசைத்தபடி விஜய் சென்றதால், அக்கட்சி தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் முத்துராமலிங்க தேவர் சிலை அருகே ஏப். 10 ஆம் தேதி காலை 12 மணி முதல் 2.30 மணி வரை விஜய் பிரச்சாரம் செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி கொடுத்திருந்தார். மேலும், காவல் துறை சார்பில் 37 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தன.
Advertisement
Advertisement
சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.எஸ்.கோட்டை, திருப்பத்தூர், தம்பிபட்டி, பிள்ளையார்பட்டி, பாதரக்குடி, காரைக்குடி புறவழிச்சாலை பகுதிகளில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கல்லூரிச் சாலையில் அவர் சிறிது தூரம் தொண்டர்கள் மத்தியில் விஜய் சைக்கிள் ஓட்டினார். பின்னர் பிரசாரம் செய்ய ஒதுக்கிய முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே வந்தபோது, பிற்பகல் 2.30 மணியை கடந்தது.
அனுமதி வழங்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரமானதால், சைக்கிள் மட்டுமே ஓட்டிவிட்டு பேசாமல் சென்றுவிட்டார்.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் விஜய் இன்று ஈடுபட்டார். அப்போது பேசுவதற்கு முன்பு விசில் ஊதியவாறு தொண்டர்களுக்கு மத்தியில் சைக்கிள் ஓட்டினார். தொண்டர்கள், ரசிகர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.