திமுக இருக்கும் வரை காவிக்கொடி பறக்காது: முதல்வர் ஸ்டாலின்
திமுக இருக்கும் வரை காவிக்கொடி ஒருபோதும் தமிழகத்தில் பறக்காது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இருக்கும் வரை காவிக்கொடி ஒருபோதும் தமிழகத்தில் பறக்காது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆண்டிப்பட்டியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் தொகுதி எண்ணிக்கை குறையும். தொகுதி எண்ணிக்கை அதிகரிப்பதுபோல தெரியும், ஆனால் உள்ளபடியே நமக்கு வருவது குறையும்.
சதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றினேன். மக்களும் கருப்பு கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வரான எனது எதிர்ப்பு, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பாகும். தனிப்பட்ட ஸ்டாலினை, மக்களவைத் தலைவர் அவமதிக்கவில்லை.
Advertisement
Advertisement
ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அவமதித்துள்ளார். திமுக இருக்கும் வரை உங்களது காவிக்கொடி ஒருபோதும் இங்கு பறக்காது. சமத்துவம், சமூக நீதி, பொதுவுடைமை என கருப்பு, சிகப்பு, நீலக்கொடிகள்தான் பறக்கும்.
தமிழ்நாடா? தில்லியா? என்ற போராட்டத்தில், பாஜக விரட்டியடிக்கப்பட வேண்டும். பாஜகவுக்கு உறுதுணையாக இருக்கும் அடிமை அதிமுகவும் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்று பேசினார்.