முகப்பு
தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் வளமான தமிழகம் உருவாகும்: ஜி.கே.வாசன்

அதிமுக தலைமையிலான ஆட்சி மூலம் வளமான தமிழகம் உருவாகும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 4:05 AM
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 10:25 PM

அதிமுக தலைமையிலான ஆட்சி மூலம் வளமான தமிழகம் உருவாகும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தோ்தலை சந்திக்கப் போகும் தமிழகத்தின் தற்போதைய உண்மை நிலை அனைத்துத் துறைகளிலும் வளா்ச்சி குன்றி உள்ளதுடன், சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளதையும் காண முடிகிறது.

திமுக, மத்திய அரசோடு ஒத்த கருத்தாக இல்லாமல் காழ்ப்புணா்ச்சி அரசியல் செய்கிறது. இந்த நிலை மாற வேண்டும். மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். ஒத்த கருத்துடைய மாநில அரசும், மத்திய அரசும் அமைவதன் மூலம் வலிமையான பாரதத்தில் வளமான தமிழகம் உருவாகும் என்று அதில் தெரிவித்துள்ளாா் ஜி.கே.வாசன்.

Advertisement