பேரவைத் தேர்தல்! நச்சென பிரசாரத்தை நிறைவு செய்யப்போவது யார்?
பேரவைத் தேர்தல் நெருங்கிவிட்டது, இறுதி நாளில் நச்சென பிரசாரத்தை நிறைவு செய்யப்போவது யார்? என்பது பற்றி..
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில், கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாவட்டந்தோறும் சுற்றி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்த தலைவர்களும், தற்போது தங்களது சொந்த தொகுதி மற்றும் மாவட்டங்களில் பிரசாரத்தை நிறைவு செய்யும் திட்டத்தில் உள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலையிலேயே தமிழ்நாட்டு மக்களுக்கு சமூக வலைத்தளத்தில் ஒரு விடியோ வெளியிட்டுள்ளார். அதில், தன்னுடைய ஐந்து ஆண்டு கால பணிகள் குறித்து என் மேலே நம்பிக்கை வைத்து என்னை முதல்வராக்கி ஐந்து ஆண்டுகள் ஆகிருக்கின்றன. சிஎம் சார் முதல்வராக ஐந்து ஆண்டுகள் இருந்து என்ன செய்தீர்கள் என்று கேட்டால், மணி கணக்காக, ஏன் நாள் கணக்காகக்கூட பேச முடியும் என்று கூறி தனது பணிகளை பட்டியலிட்டுள்ளார்.
Advertisement
நிறைவு நாளில், இந்த விடியோ, அனைத்து வாக்காளர்களையும் சென்றடையும் வகையில் அமைந்திருந்தது.
அதுபோல, சட்டசபை தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நம்பிக்கைத் தெரிவித்த பழனிசாமியும் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டதாகவும், குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்ட நேரம் வந்துவிட்டதாகவும் விடியோ வெளியிட்டுள்ளார்.