கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளைக் கண்டு யாரும் கலங்கத் தேவையில்லை என இபிஎஸ் வேண்டுகோள்...
கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் பொய்யான தகவல்களைப் பரப்பி மக்களை திசை திருப்பும் வேலையை திமுக செய்து வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 30) விமர்சித்தார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி,
எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு அதிமுக ஆட்சி மலர்வது நிச்சயம். திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது.
Advertisement
கருத்துக் கணிப்புகள் என்ற பேரில் பொய் தகவல்களைப் பரப்பி, தமிழக மக்களையும் அதிமுக தொண்டர்களையும் திசை திருப்பும் வேலையை, திமுக திட்டமிட்டு செய்து வருகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளைக் கண்டு யாரும் கலங்கத் தேவையில்லை.
summary