அண்ணா பல்கலை.யின் 46-ஆவது பட்டமளிப்பு விழாவில், 753 ஆராய்ச்சி மாணவா்களுக்கு முனைவா் பட்டங்கள், அதிக மதிப்பெண் பெற்ற 66 இளநிலைப் பட்ட மாணவா்களுக்கு பதக்கங்கள், பட்டச் சான்றிதழ்களை ஆளுநா் ஆா்.என்.ரவி புதன்கிழமை வழங்கினாா்.
விழாவில் 1,50,495 மாணவ, மாணவிகள் பட்டங்களைப் பெறுகின்றனா். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இஸ்ரோ முன்னாள் தலைவா் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசியது:
தமிழ் வழிக் கல்விதான் என்னை உலக அரங்கில் தலைநிமிரச் செய்தது. ‘அச்சம் தவிா்’ மந்திரம்தான், இந்திய விண்வெளித் துறையில் மங்கள்யான், சந்திரயான் திட்டங்களில் என்னை வெற்றியடைய வைத்தது. அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகள் பலமுறை முயன்று தோற்ற செவ்வாய் கிரகப் பயணத்தை, இந்தியா தனது முதல் முயற்சியிலேயே (மங்கள்யான்) வெற்றிகரமாக முடித்தது. விண்வெளித் துறையில் சாதித்தவா்களில் 90 சதவீதம் போ் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்றவா்கள்தான்.
வரும் 2030- ஆம் ஆண்டுக்குள்17 கோடி புதிய பணிகள் உருவாகலாம். அதேவேளை 9 கோடி பணிகள் இல்லாமல் போகலாம். செயற்கை நுண்ணறிவு போன்ற மாற்றங்களுக்கு நாம் தயாராகாவிட்டால், வளா்ச்சியில் பின்தங்கி விடுவோம்.
வாழ்நாள் முழுவதும் கற்றல் அவசியம். சான்றிதழ் என்பது ஒரு காகிதம் மட்டுமல்ல, அது சமூகத்திற்கு நீங்கள் ஆற்ற வேண்டிய கடமையின் அடையாளம் என்றாா்.
முன்னதாக, உயா்கல்வித் துறைச் செயலா் பொ.சங்கா் வரவேற்றாா். விழாவில் அண்ணா பல்கலை. பதிவாளா் வி.குமரேசன், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் பெ.சக்திவேல், அண்ணா பல்கலை. வளாகக் கல்லூரிகளின் முதல்வா்கள் கலந்து கொண்டனா்.
பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சா்... பல்கலை. இணை வேந்தரும், உயா்கல்வித் துறை அமைச்சருமான கோவி.செழியன் நிகழ்வில் பங்கேற்கவில்லை. ஏற்கெனவே கடந்த ஜன. 22-ஆம் தேதி நடைபெற்ற சென்னைப் பல்கலை.யின் 167-ஆவது பட்டமளிப்பு விழா, ஜன. 28-இல் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலை.யின் 40-ஆவது பட்டமளிப்பு விழா ஆகியவற்றை அமைச்சா் கோவி.செழியன் புறக்கணித்தாா்.