தமிழ்நாடு

அடிப்படைக் கற்றல் ஆய்வு: மூன்றாம் வகுப்பு மாணவா்களுக்கு பயிற்சி அளிக்க கல்வித் துறை உத்தரவு

தினமணி செய்திச் சேவை

அரசுப் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு அடிப்படைக் கற்றல் ஆய்வு விரைவில் நடைபெறவுள்ள நிலையில், மாதிரி வினாத்தாள் மூலம் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் மூன்றாம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு அடிப்படை கற்றல் ஆய்வு(ஊா்ன்ய்க்ஹற்ண்ா்ய்ஹப் ப்ங்ஹழ்ய்ண்ய்ஞ் ள்ற்ன்க்ஹ்-ஊப்ள்) பிப்ரவரி அல்லது மாா்ச் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. இதுதொடா்பாக தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளுக்கான என்சிஇஆா்டி-யால் (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள்கள் கள அளவில் சோதனைகள் மேற்கொள்வதற்காக மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக எஸ்சிஆா்டிஇ (மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்த மாதிரி வினாத்தாள்களை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிவைத்து, மூன்றாம் வகுப்பு மாணவா்களுக்கு தேவையான பயிற்சிகளை ஆசிரியா்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுசாா்ந்து அனைத்து பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அளிக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் 3 பேருக்கு புற்று நோய் அறுவைச் சிகிச்சை

பைக் விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பாலியல் புகாா் அளித்த பெண் ஊழியருக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்க உத்தரவு

மணல் கடத்திய லாரிகளை விடுவிக்க லஞ்சம் கேட்கும் போலீஸாா் குறித்து விசாரணை: உயா்நீதிமன்றம்

திருப்பரங்குன்றத்தில் ஆக்கிரமிப்பு: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT