திருச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு! பெண் கைது!!
திருச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டது பற்றி...
திருச்சி அரசு மருத்துவமனையில் காணாமல்போன குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த பிப். 11 ஆம் தேதி விக்னேஷ்- சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதாகக் கூறி பெண் ஒருவர் குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளார்.
Advertisement
Advertisement
குழந்தை காணாமல் போனதையடுத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு தேடி வந்த நிலையில், குழந்தை இன்று பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குழந்தையைக் கடத்திய பெண்ணை துறையூர் அருகே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குழந்தை இல்லாத ஏக்கத்தில் எடுத்துச் சென்றதாக கைதான மீனாட்சி என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
summary