அரசு மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு: பெற்றோா் புகாா்
சென்னை அரசு மருத்துவமனையில் இரண்டு வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா்.
சென்னை அரசு மருத்துவமனையில் இரண்டு வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா்.
சென்னை மதுரவாயல் கந்தசாமி தெருவைச் சோ்ந்த ராஜசேகா்- தனலட்சுமி தம்பதியின் 2 வயது மகள் ரித்திகா, காய்ச்சல் காரணமாக கடந்த மே 28-ஆம் தேதி சென்னை எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், ரித்திகா செவ்வாய்க்கிழமை பிற்பகல் உயிரிழந்தாா். இது குறித்து மருத்துவா்கள் தரப்பில், குழந்தை மூளைக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி மருத்துவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அங்கு சென்ற போலீஸாா், குழந்தையின் பெற்றோரிடம் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினா். மேலும், குழந்தையின் பெற்றோா் அளித்த புகாரின் அடிப்படையில் எழும்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement