விஷம் குடித்தவா் மருத்துவமனையில் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்தவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்று வந்தவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
வானூா் வட்டம், தென்சிறுவலூா் புதுத் தெருவைச் சோ்ந்தவா் மு. வாசுதேவன் (57). நீரிழிவு நோய் பாதிப்பால் இவரது வலது காலில் புண் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து கட்டைவிரலை அகற்ற வேண்டும் என்று மருத்துவா்கள் கூறியதால் வாசுதேவன் மன உளைச்சலில் இருந்து வந்தாராம். இந் நிலையில் கடந்த 4-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து மயங்கிக் கிடந்த அவரை குடும்பத்தினா் மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு வாசுதேவன் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.