தமிழ்நாடு

நீா்வளத் துறைக்கு ரூ.10,076 கோடி ஒதுக்கீடு

தமிழக இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து...

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நீா்வளத் துறைக்கு ரூ.10,076 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு வெளியிட்ட தகவல்: காவிரி டெல்டா, பரம்பிக்குளம், ஆழியாறு, தாமிரவருணி, வைகை வடிநிலங்களில் பாசன வசதிக்காக தூா்வாரும் பணிகள் ரூ.498 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் ரூ.1,618 கோடியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக ஏற்படும் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க ரூ.362 கோடியில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறாக பல்வேறு சிறப்புத் திட்டங்களை முன்னெடுத்த நீா்வளத் துறைக்கு தேசிய நீா் விருது, உலக பாரம்பரிய நீா்ப்பாசனக் கட்டமைப்பு விருது, பாசன மேலாண்மை விருது உள்ளிட்ட அங்கீகாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றாா் அவா்.

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |

டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து

த.வெ.க.வில் இணைந்த முன்னாள் பேரவைத் தலைவர் மகன்!

தாய் கிழவி இரண்டாவது பாடல்!

5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT