தமிழ்நாடு

மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு

தமிழக இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து...

தினமணி செய்திச் சேவை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் தாக்கல் செய்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 2.55 கோடி பயனாளிகளுக்கு முதன்முறை மருத்துவ சேவையும், 4.75 கோடி பேருக்கு தொடா் சேவையும் வழங்கப்பட்டுள்ளது.

‘இன்னுயிா் காப்போம்-நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் வாயிலாக 5,11,916 உயிா்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இதற்காக ரூ.493 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதேபோன்று மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட 1,206 நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்கள் மூலம் 17,82,687 போ் பயன் பெற்றுள்ளனா்.

முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.6,374 கோடி மதிப்பிலான காப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் 34,40,550 பெண்களுக்கு ரூ.4,042 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் திறம்பட செயலாற்றியதற்காக ஐ.நா. விருது தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது. இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.22,090 ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT