தன் வாகனத்தின் பின்னால் யாரும் வர வேண்டாம் என்று தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
வேலூரில் மக்கள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் இன்று(பிப். 23) நடைபெற்றது.
இன்றைய கூட்டத்திற்கு தவெக தலைவர் விஜய் வரும்போது தொண்டர்கள் அவரது வாகனத்தின் பின் வந்தனர். இரு சக்கர வாகனங்களில் பலரும் அவரது வண்டியின் பின்னாலும் அருகிலும் வந்தவண்ணம் இருந்தனர்.
ஒவ்வொரு முறையும் விஜய் அறிவுறுத்தினாலும் தொண்டர்கள் விஜய்யின் வாகனத்தை பின்தொடர்வது நடந்துகொண்டிருக்கிறது.
கூட்டத்தில் சுமார் அரை மணி நேரம் பேசிய விஜய் இறுதியாக தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.
"நான் சென்னைக்கு 4 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். தயவுசெய்து யாரும் என் வண்டியின் பின்னாலோ அல்லது வண்டிக்கு அருகிலோ பைக்கில் வர வேண்டாம், உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.