முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த ஆலோசனை: ஞானேஷ் குமார்

தமிழகத்தில் பேரவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தகவல்

Updated On : 27 பிப்ரவரி 2026, 1:24 pm IST
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
பகிர்:

தமிழகத்தில் பேரவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார்.

சென்னையில் தனியார் விடுதியில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஞானேஷ் குமார் பேசுகையில், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று கட்சிகள் பரிந்துரைத்துள்ளன. அனைத்து காரணிகளையும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இதுகுறித்த முடிவு எடுக்கப்படும்.

தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டவுடன், தேர்தலுக்கான கட்டங்கள் குறித்த தேர்தல் ஆணையத்தின் முடிவு தெரிய வரும்.

Advertisement

Advertisement

மாநிலம் முழுவதும் 75,000 வாக்குச் சாவடிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். புதிய முயற்சிகளில் முக்கியமான ஒன்று என்றால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு முன்னதாக 2 சுற்றுகள் தபால் வாக்குகள் எண்ணப்படும்.

தமிழ்நாட்டில் சமீபத்தில் முடிவடைந்த எஸ்ஐஆர் பணிகள், நாட்டுகே ஒரு முன்மாதிரி மற்றும் ஒரு பெரிய வெற்றியாகும். தமிழகத்தில் வரும் பேரவைத் தேர்தலில் தேர்தல் அதிகாரிகள் அச்சமின்றி செயல்படலாம் என்று தெரிவித்தார்.

summary

Decision will be taken on plea to hold single phase polls in Tamil Nadu: CEC Gyanesh Kumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments