முகப்பு
தமிழ்நாடு

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்!

ஓ. பன்னீர்செல்வம் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தது பற்றி...

Updated On : 27 பிப்ரவரி 2026, 11:20 am IST
ஓ. பன்னீர்செல்வம்
பகிர்:

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவில் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இடையே ஒற்றைத் தலைமைப் பிரச்னை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். சட்டப் போராட்டமும் ஓபிஎஸ்ஸுக்கு பலனளிக்கவில்லை.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று அக்கட்சியில் ஓபிஎஸ் இணைந்துள்ளார்.

Advertisement

Advertisement

ஓ. பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்துக்கு சென்ற ஓபிஎஸ் மற்றும் ஐயப்பன் ஆகியோர் பேரவை செயலாளரை நேரில் சந்தித்து தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தனர்.

ஓ. பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஐயப்பன் உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

O. Panneerselvam resigned from his MLA post!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments