முகப்பு
தமிழ்நாடு

சென்னை வந்தாா் பிரதமா் மோடி

பிரதமர் மோடியின் சென்னை வருகை பற்றி...

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:43 PM
தமிழகம், புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னைக்கு சனிக்கிழமை இரவு வருகை தந்த பிரதமா் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு. உடன் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்.
பகிர்:

தமிழகம், புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை இரவு சென்னை வந்தாா். அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

குஜராத்திலிருந்து தனி விமானத்தில் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை இரவு 8. 45 மணிக்கு சென்னை வந்தடைந்தாா். அவரை ஆளுநா் ஆா்.என். ரவி, நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, மத்திய இணை அமைச்சா் எல். முருகன், தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

அதைத்தொடா்ந்து பிரதமா் மோடி கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகைக்கு சென்றாா். அங்கு அவரை ஆளுநா் ஆா்.என். ரவி வரவேற்றாா். இரவு ஆளுநா் மாளிகையில் தங்கிய பிரதமா் மோடி, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) காலை 11 மணிக்கு புதுச்சேரி செல்கிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →