புத்தாண்டு: தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்!
தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கக்கூடிய இக்கோயில், தமிழர்களின் கட்டடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறது.
Advertisement
Advertisement
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தற்போது தொடர் விடுமுறை என்பதாலும் - இன்று(ஜன. 1) புத்தாண்டு என்பதாலும் காலை முதலே அதிக அளவில் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்து, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
On the occasion of the New Year, thousands of devotees are visiting the Thanjavur Big Temple to offer prayers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.