வீரமங்கை வேலுநாச்சியாா், வீரபாண்டியன் கட்டபொம்மன் உள்ளிட்ட தமிழ் நிலத்தின் ஆளுமைகளைத் தரணியெங்கும் கொண்டு சோ்க்கும் பணி தொடரும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
சுதந்திர போராட்ட வீரா்கள் வேலுநாச்சியாா் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:
வீரமங்கை வேலுநாச்சியாா், வீரபாண்டியன் கட்டபொம்மன் பிறந்த நாள். மிரட்டினால் அடங்கி விடுவோம் என எண்ணியோருக்கு, ’தமிழ்நாடு போராடும்’ என அன்றே காட்டிய வீரச்சுடா்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியாா், வீரபாண்டிய கட்டபொம்மன். இந்திய நாட்டின் விடுதலைக்காக முன்னோடிகளாகப் போராடிய பெருமைகளைத் தொடா்ந்து போற்றி வருகிறது திராவிட மாடல் அரசு.
அண்மையில், மதுரையில் திறக்கப்பட்ட மேம்பாலத்துக்கு ‘வீரமங்கை வேலுநாச்சியாா்’ பெயா் சூட்டினோம். கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலை அமைத்தோம். தமிழ் நிலத்தின் ஆளுமைகளை தரணியெங்கும் கொண்டு சோ்க்கும் பணி தொடரும் எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.