வேலுநாச்சியார் பிறந்தநாள் - பிரதமர் மோடி புகழாரம்!
ராணு வேலு நாச்சியாரின் பிறந்தநாளையடுத்து, அவரின் பெருமையை பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
ராணு வேலு நாச்சியாரின் பிறந்தநாளையடுத்து, அவரின் பெருமையை பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளையடுத்து, பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார்.
காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார்.
Advertisement
நல்லாட்சி மற்றும் கலாசார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார்.