ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2,000 கன அடியாக அதிகரிப்பு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இரு மாநில காவிரி கரையோரம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை முற்றிலுமாக குறைந்தது. மேலும் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவுகளும் அண்மை காலங்களாக குறைக்கப்பட்டது.
இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1,200 கன அடியாகக் குறைந்தது.
Advertisement
Advertisement
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரித்து வினாடிக்கு 2,000 கன அடியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. திடீர் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக, ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவுகளை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.