குடியரசு நாளை முன்னிட்டு 1 லிட்டர் பெட்ரோல் ரூ. 50-க்கு விற்பனை!
1 லிட்டர் பெட்ரோல் ரூ. 50-க்கு விற்பனை குறித்து...
ஆடுதுறையில் குடியரசு நாளை முன்னிட்டு 1 லிட்டர் பெட்ரோல் ரூ. 50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேவுள்ள ஆடுதுறையில் குடியரசு நாளை முன்னிட்டு இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் மோகனசுந்தரம், குடியரசு நாளான இன்று(ஜன. 26) காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வரும் அனைவருக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 50க்கு போடப்படும் என்ற தெரிவித்திருந்தார்.
அதுபோல், இன்று காலை 9.30 மணிக்கு 500க்கும் மேற்பட்ட மக்கள், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து நீண்ட வரிசையில் நின்று பெட்ரோலை நிரப்பி சென்றனர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதனால், அப்பகுதியில் சிறுதுநேரம் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து, காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
To mark Republic Day, one liter of petrol is being sold.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.