முகப்பு
தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

கடந்த 2 வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 4வது முறையாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது.

Updated On : 25 மே 2026, 8:36 am IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வு - PTI
பகிர்:

கடந்த 2 வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 4வது முறையாக இன்றும் உயர்த்தப்பட்டுள்ளது.

மேற்காசிய போரின் எதிரொலியாக, ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியப் பொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்தும்படி, நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்தாா்.

அதைத் தொடா்ந்து, பெட்ரோல்-டீசல் விலை அடுத்தடுத்து மூன்று முறை உயா்த்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களில் 4ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை இன்று(திங்கள்கிழமை) மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 46 காசு வீதமும் , டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசு வீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி, கடந்த 10 நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 7.2, டீசல் விலை ரூ7.38 என்ற அளவு உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு காரணமாக சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 107.77-ஆகவும், டீசல் ஒரு லிட்டா் ரூ. 99.55 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.