கோப்புப்படம் 
தமிழ்நாடு

அண்ணா நினைவு நாள்: முதல்வா் ஸ்டாலின் தலைமையில் பிப். 3-இல் அமைதிப் பேரணி

அண்ணா நினைவு நாள்: முதல்வா் ஸ்டாலின் தலைமையில் பிப். 3-இல் அமைதிப் பேரணி

தினமணி செய்திச் சேவை

முன்னாள் முதல்வா் அண்ணாவின் 57-ஆவது நினைவு நாளான பிப். 3-ஆம் தேதி (செவ்வாய்) திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக சென்னை மாவட்ட திமுக சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: முதல்வா் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தைச் சென்றடையும்.

கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு மற்றும் கட்சியினா் அன்றைய தினம் காலை 7 மணிக்கு காமராஜா் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.16.7 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு: மத்திய பட்ஜெட்

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: செய்திகள் உடனுக்குடன்!

பாதுகாப்புத் துறைக்கு ரூ. 7.8 லட்சம் கோடி!

சுகாதாரத் துறையில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்!

நாடு முழுவதும் சுற்றுலாவை ஊக்குவிக்க வெளியான அறிவிப்புகள்!

SCROLL FOR NEXT