ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி
தவெகவுடன் அதிமுக இணையும் என இனியும் பேசினால் ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக துணைப் பொதுச்செயலர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
தவெகவுடன் அதிமுக இணையும் என இனியும் பேசினால் ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக துணைப் பொதுச்செயலர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ணகிரியில் அவர் அளித்த பேட்டியில், ஆதவ் அர்ஜுனா போல் கொள்கையின்றி பல கட்சிகளுக்கு ஓடுபவர்கள் அதிமுக தொண்டர்கள் கிடையாது. வாய்ப்பு கிடைக்கும் இடங்களுக்கு ஓடுகாலியாகச் சென்றவர்தான் ஆதவ் அர்ஜுனா. அவருக்கென்று தனித்தன்மை கிடையாது.
புஸ்ஸி ஆனந்தை பார்க்கத்தான் ஆட்டுக்கூட்டம் போல அதிமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் ஓடுகிறார்கள். அந்த கட்சித் தலைவரைப் பார்க்க அல்ல. அவர்கள் ஜாம்பவான்கள் இல்லை. சந்தர்ப்பவாதிகள், துரோகிகள், ஓடுகாலிகள். ஆதவ் அர்ஜுனாவுக்கும் விஜயபாஸ்கருக்கும் வித்தியாசம் கிடையாது.
Advertisement
Advertisement
தவெகவுடன் அதிமுக இணையும் என இனியும் பேசி வந்தால் ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு அதிமுக தொண்டன்தான் ஜாம்பவான்கள். அந்த தொண்டனால் உருவாக்கப்பட்டவர்கள்தான் இதுபோன்ற ஓடுகாலிகள். ஜாம்பவான்கள் அனைவரும் அதிமுகவில்தான் உள்ளனர்.
லெட்டர் பேர்ட்டை வைத்து ஏமாற்றும் கூட்டம்தான் அங்கே சென்றுள்ளது. 31 ஆண்டுகாலம் அதிமுக கொண்டு வந்த திட்டங்களால்தான் தமிழகம் இன்று முதன்மை மாநிலமாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட இயக்கம். கிட்டதட்ட 2 கோடி தொண்டர்களை உள்ளடக்கிய இயக்கம் என்றார்.
AIADMK deputy general secretary K. P. Munusamy has stated that legal action will be taken against Aadhav Arjuna if he continues to speak about AIADMK merging with TVK.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.