முகப்பு
தமிழ்நாடு

நலம்ஏஐ செயலி! அரசு மருத்துவமனையில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வாட்ஸ்ஆப் மூலமாக புறநோயாளிகள் பிரிவு சேவைக்கான முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம்...

Updated On : 8 ஜூலை 2026, 12:57 pm IST
நலம்ஏஐ செயலி - X | arunraj
பகிர்:

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வாட்ஸ்ஆப் மூலமாக புறநோயாளிகள் பிரிவு சேவைக்கான முன்பதிவு செய்யும் வசதியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று (ஜூலை 8) தொடக்கிவைத்தார்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சைக்கான புறநோயாளிகள் பிரிவுக்கு மட்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை, படிப்படியாக மற்ற துறைகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

மக்களுக்கு அரசின் மருத்துவ சேவைகள் எளிதில் சென்றடையும் வகையில் "நலம்AI" என்ற பெயரில் வாட்ஸ்ஆப் சாட்பாட் சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதன் மூலமாக இந்த வாட்ஸ்ஆப் மூலமாகவே புறநோயாளிகள் பிரிவுக்கு முன்பதிவு செய்துகொள்ள முடியும். இதற்கு வாட்ஸ்ஆப்பில் 9619222999 என்ற எண்ணுக்கு 'hi' என்று அனுப்பினால் அதில் கேட்கும் விவரங்களுக்கு பதில் அளித்தால் மருத்துவ சேவைக்கு முன்பதிவு செய்யப்படும்.

Advertisement

Advertisement

அதேபோல அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைக்கு ஆதார் கட்டாயம் என்ற புதிய நடைமுறையால் மக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், 'ஆதார் இல்லையென்றால் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை மறுக்கப்படாது' என்று கூறினார்.

இணைய வழியில் மருத்துவ சேவையை பதிவு செய்யும் வசதி கொண்டு வருவதே முதல்வரின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

summary

Book appointments for treatment at the government hospital via WhatsApp

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments