பள்ளிகளில் தவெக கொடியுடன் முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்! அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
பள்ளிகளில் தவெக கொடியுடன் முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது பற்றி...
பள்ளி, கல்லூரிகளில் தவெக கொடியுடன் முதல்வர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது குறித்து விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் 22 ஆம் தேதி, தவெக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஜோசப் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் தவெக நிர்வாகிகள் கட்சிக் கொடியுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
குறிப்பாக திருவள்ளூர் அரசுப் பள்ளி ஒன்றில் 3,000 மாணவர்களை முதல்வர் விஜய்யின் உருவம் போன்று வெய்யிலில் அமரவைக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், விதிகளை மீறி மாணவர்களை அரசியல் நிகழ்வுகளுக்கு பயன்படுத்தியதாக சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் கவிகணேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவில், விதிகளை மீறி அரசியல் நிகழ்வு நடத்திய தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
Celebration of TVK leader Vijay's birthday in schools with the party flag; High Court orders government to respond.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.