உலக சுற்றுச்சூழல் தினம்: முதல்வர் விஜய் வாழ்த்து!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்துத் தெரிவித்தது பற்றி..
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்துத் தெரிவித்தார்.
இதுதொடரபாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட செய்தியில்,
உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement
Advertisement
நாம் இன்று எடுக்கும் முடிவுகள்தான் நம் நாளைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதை இந்நாள் நமக்கு நினைவூட்டுகிறது.
இந்நாளில், மரக்கன்றுகளை நட்டு, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட உறுதியேற்போம்.
நமது சிறிய முயற்சிகளே நாளைய தலைமுறைக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் பசுமையான உலகை உருவாக்கும்.
இயற்கையைக் காப்போம்; நம் எதிர்காலத்தை வளமாக்குவோம்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.