கல்விதான் ஒளிமயமாக்கும் சக்தி! முதல்வர் விஜய் வாழ்த்து!
பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது பற்றி...
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை நிறைவடைந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களுக்கு முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிகுலேஷன் மற்றும் தனியாா் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளும், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை இன்று காலை திறக்கப்பட்டது.
இந்த நிலையில், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஜோசப் விஜய் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
அதில் தெரிவித்திருப்பதாவது:
”தமிழ்நாட்டில் இந்தக் கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி. உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும்.
மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.