முகப்பு
தமிழ்நாடு

கவர்ச்சியில்லாமல் எப்படி வெற்றி பெற்றீர்கள்? தவெக அரசுக்கு சென்னை மேயர் கேள்வி

தமிழகத்தில் தவெக அரசு எதற்கெடுத்தாலும் திமுகவையே குறைசொல்வதாக சென்னை மேயர் பிரியா விமர்சனம்

Updated On : 6 ஜூன் 2026, 2:33 pm IST
முதல்வர் விஜய் | மேயர் பிரியா - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் தவெக அரசு எதற்கெடுத்தாலும் திமுகவையே குறைசொல்வதாக சென்னை மேயர் பிரியா விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திமுகவின் புத்தெழுச்சி நாள் நிகழ்ச்சியில் மேயர் பிரியா பேசியதாவது, "இன்று பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் கூட்டம் இருக்கின்றனர். யாரென்று உங்களுக்கே தெரியும்.

கவர்ச்சி இல்லையென்றால், வேறு எதனை வைத்து நீங்கள் வெற்றி பெற்றீர்கள்? களத்தில் என்ன வேலை செய்தீர்கள்?

Advertisement

Advertisement

அவர்கள்தான் (தவெக) ஆட்சியில் இருக்கின்றனர் என்பதுகூட தெரியாமல், இன்றைக்கும் எல்லாவற்றுக்கும் திமுகதான் காரணம் என சொல்கின்றனர்.

அவர்களின் அமைச்சர்களோ எம்எல்ஏ-க்களோ யாருமே எந்தவித பொறுப்புக் கூறலும் எடுத்துக் கொள்வதில்லை. இதுதான் அவர்களின் ஆட்சி.

கரோனா தொற்றுக் காலத்தில்கூட பொறுப்பேற்றுக் கொண்டு, உரிய வழிவகை செய்ய வேண்டும் என்றும், உரிய தீர்வுகாண வேண்டும் என்றும் முன்னேற்பாடுகளுடன் அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்றார்.

ஆனால், இன்று ஆட்சியமைத்திருந்தும் 'எங்களுக்குத் தெரியாது திமுகவினர்தான், எங்களுக்குத் தெரியாது திமுகவினர்தான்' என்று சொல்கின்றனர். அப்படியென்றால், நீங்கள் ஏன் ஆட்சியில் இருக்கிறீர்கள்? ஏன் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ளீர்கள்?

ஆட்சி மற்றும் அதிகாரத்திலிருந்தும் திமுகவை குறைசொல்லும் அளவுக்கு நீங்கள் பலவீனமாக இருக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார்.

summary

Chennai Mayor Priya criticizes the TVK government for blaming the DMK for everything

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.