அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு!
அண்ணாமலைக்கு எதிரான வழக்கை டி.ஆர். பாலு வாபஸ் பெற்றது பற்றி...
இது நம்ம இயக்கத்தின் நிறுவனரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான கே. அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கை திமுக பொருளாளர் டி.ஆர். பாலு திரும்பப் பெற்றார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை ‘திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் திமுக அமைச்சா்களின் சொத்து விவரங்களை 2023-ஆம் ஆண்டு வெளியிட்டாா். அதில் டி.ஆா்.பாலு, அவரது மகனும் முன்னாள் தொழில் துறை அமைச்சருமான டி.ஆா்.பி. ராஜா ஆகியோருக்கு சொந்தமாக 21 நிறுவனங்கள் இருப்பதாகக் கூறியிருந்தாா்.
மேலும், டி.ஆா்.பாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்குச் சொத்துகள் இருப்பதாகவும் கூறியிருந்தாா். இது தனது பெயருக்கும், குடும்பத்தினா் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி டி.ஆா். பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடா்ந்தாா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு சென்னைப் பெருநகர சைதாப்பேட்டை 17- ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த விசாரணையின்போது, டி.ஆர். பாலுவிடம், அண்ணாமலையே குறுக்கு விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில், அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கை டி.ஆர். பாலு இன்று திரும்பப் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
T.R. Baalu withdraws case against Annamalai!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.