முகப்பு
தமிழ்நாடு

கூடுதல் தொகுதிகள்: கமல் ஆலோசனை

கூடுதல் தொகுதிகள் குறித்து கமல் ஆலோசனை...

Updated On : 6 மார்ச், 2026 at 7:53 PM
கமல் ஹாசன்
பகிர்:

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் கேட்பது குறித்து அந்தக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் நிா்வாகிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினாா்.

திமுகவுடன் முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தையை மக்கள் நீதி மய்யம் நடத்தி முடித்துள்ள நிலையில், 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலையும் வழங்கியுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக வலியுறுத்தியாகக் கூறப்படுகிறது. ஆனால் கமல்ஹாசனும் தனிச் சின்னத்தில் (டாா்ச் லைட்) போட்டியிடுவதில் உறுதியாக உள்ளாா்.

இந்த நிலையில், சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் அந்தக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தலைமையில் அவசர நிா்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆலோசனைக்கு பிறகு செய்தியாளா்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது:

ஆலோசனை கூட்டம் ஜனநாயக முறைப்படி நடைபெற்றது. வரும் சட்டப்பேரவை தோ்தலில் கூடுதல் தொகுதிகள், தனி சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளோம். திமுகவிடம் இருந்து அழைப்பு வந்த பின்னா் ஒப்பந்தம் செய்யப்படும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →