தவெகவால் தொகுதிகள் மாறும் அமைச்சர்கள்: நிர்மல் குமார்
தவெகவால் அமைச்சர்கள் தொகுதி மாறுவதாக தவெக நிர்வாகி நிர்மல் குமார் விமர்சனம்
தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் அமைச்சர்கள் தொகுதி மாறுவதாக தவெக நிர்வாகி நிர்மல் குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் பேசுகையில், சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்களெல்லாம் தொகுதி மாறுவதற்காக முயற்சித்து வருகின்றனர். பவள விழா கண்டவர்கள் எதற்கு தொகுதி மாறுவது குறித்து பேசுகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தால், தொகுதி மாறுவது குறித்து பெரும்பாலான திமுக அமைச்சர்கள் இன்று பேசிக் கொண்டிருக்கின்றனர். எது பாதுகாப்பான தொகுதி என பவள விழா கண்டவர்கள் ஏன் பார்க்க வேண்டும்?
சென்னையில் உள்ள எந்தத் தொகுதியும் பாதுகாப்பான தொகுதி இல்லையென வேறு தொகுதிக்கு திமுக அமைச்சர்கள் மாறுவதற்கான சூழலைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எது சரியென்று மக்களுக்குத் தெரியும் என்று தெரிவித்தார்.