விஜய்யை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் ஒதுக்கவில்லை: நிர்மல் குமார்
எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டதாக நிர்மல் குமார் கூறியுள்ளது குறித்து...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டதாக சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று (ஜூன் 2) தெரிவித்தார்.
திருச்சியில் முதல்வர் விஜய்யின் பேச்சு மக்களுக்கு புரியும் என்று, இனி அடிக்கடி மக்களை முதல்வர் சந்திப்பார் எனவும் குறிப்பிட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுடன் நிர்மல் குமார் பேசியதாவது:
Advertisement
Advertisement
முதல்வர் விஜய் திருச்சியில் மக்களை சந்தித்துப் பேசியது மக்களுக்குப் புரியும். அவர் தேவையற்ற வார்த்தைகளைப் பேசுவதில்லை. குழந்தைகளைக் கூட கவரக்கூடிய வகையில் பேசக்கூடியவர்.
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முக்கிய தலைவர்கள் அனைவரையும் சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவும் நேரம் கேட்கப்பட்டது. ஆனால், அவர்கள் தரப்பில் இருந்து உறுதி அளிக்கப்படவில்லை.
ஒருசிலர் தங்கள் அரசியல் சூழல் கருதி நிராகரித்தனர். அதனால் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவில்லை. இதை அப்போது கூறவில்லை. இப்போது விளக்க வேண்டிய இடத்தில் உள்ளதால் இதைக் கூறுகிறேன்.
முந்தைய ஆட்சியை விட இந்த ஆட்சியில் காவல் துறையினரை எளிதில் அணுக முடிவதாக மக்கள் கூறுகின்றனர்.
கஞ்சா, குட்கா விற்கின்றனர் என காவல் துறையில் கூறினால், உடனே அங்கு சென்று நடவடிக்கை எடுக்கின்றனர்.
சட்டவிரோதமான குவாரிகளுக்கு எதிராக முந்தைய ஆட்சியில் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போது அவை முடக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத குவாரியின் ஒரு லாரியை நீங்கள் பார்க்க முடியாது.
குற்றங்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனிப்பட்ட குற்றச் செயல்களுக்காக ஒட்டுமொத்தமாக சட்டம் - ஒழுங்கு சரியில்லை எனக் கூறக்கூடாது என அமைச்சர் நிர்மல் குமார் குறிப்பிட்டார்.
TVK Seeks Appointment to Meet Edappadi Palaniswami Minister Nirmal Kumar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.