தமிழகத்தில் மாா்ச் 31 வரை வெப்பம் அதிகரிக்கும்
தமிழகத்தில் மாா்ச் 31 வரை வெப்பத்தின் அளவு சற்று அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மாா்ச் 31 வரை வெப்பத்தின் அளவு சற்று அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
மன்னாா் வளைகுடா முதல் வடக்கு உள் கா்நாடகம் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை, ஓரிரு இடங்களில் மாா்ச் 31-ஆம் தேதி வரை சற்று அதிகமாக இருக்கக்கூடும்.
மேலும், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 28, 29) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக் கூடும்.
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள், செவ்வாய்க்கிழமை (மாா்ச் 30, 31) மிதமான மழையும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும். தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப். 1-ஆம் தேதி லேசான மழை பெய்யக் கூடும். தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மற்றும் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஏப். 2-ஆம் தேதி மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.