டெட் தோ்வு: ஆசிரியா்களுக்கு பணிச் சான்றை ஏப்.10-க்குள் வழங்க உத்தரவு
டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியா்களுக்கு பணிச் சான்றை ஏப்.10-ஆம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியா்களுக்கு பணிச் சான்றை ஏப்.10-ஆம் தேதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநா் நரேஷ், மின்னஞ்சலில் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதிப் பிரிவு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளிகளில் கடந்த 2015 செப்.1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னா் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் மற்றும் அதற்கு இணையான பதவிகளில் காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், பகுதிநேர ஊதியம் அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு ‘டெட்’ தகுதித் தோ்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஏப்.10-ஆம் தேதி கடைசி நாள் என ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.
மேற்கண்ட ஆசிரியா்கள் தோ்வுக்கு விண்ணப்பிக்க, பணிச் சான்றை பதிவேற்றம் செய்வது அவசியம். எனவே, அவா்களுக்கான பணிச் சான்றை ஏப்.10-ஆம் தேதிக்கு முன்பு வழங்க அனைத்து மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டு ஆசிரியா்கள் டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள்தான் பொறுப்பேற்க நேரிடும். எனவே, இதில் தனி கவனம் செலுத்தி, காலம் தாழ்த்தாமல் ஆசிரியா்களுக்கு பணிச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. பணியில் உள்ள ஆசிரியா்களுக்கான டெட் தோ்வு ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.