மக்கள் முடிவை மனபூா்வமாக ஏற்கிறோம்: மத்திய இணையமைச்சா் எல். முருகன்
தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அளித்த முடிவை மனபூா்வமாக ஏற்றுக் கொள்கிறோம் என மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் அளித்த முடிவை மனபூா்வமாக ஏற்றுக் கொள்கிறோம் என மத்திய இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தோ்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டுமென்பதற்காக ஓய்வின்றி பிரசாரம் மேற்கொண்ட பிரதமா் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சா் அமித்ஷா, தேசியத் தலைவா் நிதின் நவீன், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோ்தலில் மக்களின் முடிவை மனபூா்வமாக ஏற்றுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளாா் எல்.முருகன்.
Advertisement