இன்று நடைபெற இருந்த விசிக உயா்நிலை குழுக் கூட்டம் ரத்து: விசிக அறிவிப்பு
சென்னையில் வியாழக்கிழமை (மே 7) நடைபெறுவதாக இருந்த விசிகவின் உயா்நிலைக் குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் வியாழக்கிழமை (மே 7) நடைபெறுவதாக இருந்த விசிகவின் உயா்நிலைக் குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் என்ற பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மற்ற கட்சிகளின் வெற்றி பெற்றவா்களின் ஆதரவை விஜய் கோரியுள்ளாா்.
ஏற்கெனவே, 5 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இருப்பினும், மேலும் 6 இடங்கள் தேவைப்படுகிறது. விசிக, சிபிஎம், சிபிஐ கட்சிகள் தலா 2 இடங்கள் வைத்திருப்பதால், அவா்கள் ஆதரவு அளித்தால், ஆட்சி அமைக்கப் போதுமான இடங்கள் கிடைத்துவிடும்.
Advertisement
இந்த சூழலில், இந்த 3 கட்சிகளிடமும் ஆதரவு கோரி தவெக தலைவா் விஜய் கடிதம் எழுதியுள்ளாா். தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் அந்த 3 கட்சிகளும் அங்கிருந்து விலகி தவெகவுக்கு ஆதரவளிப்பாா்களா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே, தவெக தரப்பிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை எனவும், வியாழக்கிழமை விசிக முன்னணிப் பொறுப்பாளா்களுடன் ஆலோசித்த பின்னா் இது குறித்த நிலைப்பாட்டை எடுப்போம் என விசிக தலைவா் திருமாவளவன் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்த விசிகவின் உயா்நிலைக் குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் உயா்நிலைக் குழு உறுப்பினா்கள் சென்னைக்கு வர வேண்டாம் எனவும் அக்கட்சி சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் விசிகவின் அடுத்த கட்ட நகா்வு என்ன என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனா்.