திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?
திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா அல்லது வேண்டுமென்றே பரப்பப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
சொன்னாலும் பொருந்தச் சொல்லணும் என்று சொல்வார்கள், ஆனால் திமுக - அதிமுக கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக புதன்கிழமை மாலை முதல் கிளம்பிய தகவல் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததே தவிர அதில் உண்மையிருக்காது என்று இரு கட்சிகளின் அடிப்படை உறுப்பினர்களுக்கும் தெரிந்தே இருந்தது.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் தவெகவுக்கு 108 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு கிடைத்த போதிலும் பெரும்பான்மை கிடைக்காததால், சில கட்சிகளின் ஆதரவை எதிர்நோக்கியிருக்கிறது.
புதன்கிமை காலை, தவெக கோராத போதும், அதிமுக நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக அறிவித்திருந்தது. ஆனால், அதற்கு தவெக தரப்பில் எந்த பதிலும் சொல்லப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக, நாங்கள் கீழே இறங்கி வந்து ஆதரவு என்று சொன்னாலும் அதனை ஏற்காத தவெகவுக்கு ஆதரவு இல்லை என்று அறிவித்துவிட்டது.
Advertisement
பெரும்பான்மையை நிரூபிக்க தவெக பிற கட்சிகளிடம் ஆதரவு கோரிய நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் புதன்கிழமை காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது. வியாழக்கிழமை காலை பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன.
ஆனால் நேற்று மாலைக்குப் பிறகு பரபரப்பு குறைந்தது. ஆளுநரிடமிருந்து அழைப்பு வரவில்லை. இதனால் விஜய் வீட்டுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்புகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டன. இதற்கு யார் உத்தரவு பிறப்பித்தார்கள் என்பதெல்லாம் வேறுகதை.