விஜய் சீக்கிரமே பதவியேற்பார்! முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தபின் ரங்கசாமி பேட்டி
புதுவை முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தபின் ரங்கசாமி பேட்டி
தவெக தலைவர் விஜய் சீக்கிரமே பதவியேற்பார், அவருக்கு வாழ்த்துகள் என என்ஆர்காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறினார்.
புதுவையில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 5 ஆவது முறையாக ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்கிறார்.
இதையடுத்து தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்த ரங்கசாமி செய்தியாளர்களுடன் பேசுகையில்,
Advertisement
Advertisement
"புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளேன். விரைவில் புதிய அரசு பதவியேற்கும். தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் முடிந்த பிறகு ஆட்சி அமைக்க உரிமை கோர, கடிதம் கொடுப்பேன்" என்றார்.
அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் ஆட்சி அமைக்க சிக்கல் ஏற்பட்டுள்ளது குறித்து கேட்டதற்கு, "விஜய்க்கு வாழ்த்து.. சீக்கிரமே அவர் பதவி ஏற்பார். ஆட்சி அமையும்" என்றார்.
Vijay Will Soon Assume Office as Chief Minister: Rangasamy Resigning as Chief Minister in puducherry
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.