தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?
தொங்கு சட்டப்பேரவை எப்படி அமையும், இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா? என்பது பற்றி..
தமிழ்நாட்டில் தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கும் தவெக, ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையைப் பெற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ஆளுநர் விஜய்யை ஆட்சியமைக்க அழைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு விஜய் நேற்று ஆளுநரை சந்தித்திருந்த நிலையில், ஆளுநர் அழைப்பு விடுக்காததால், இன்று காலை மீண்டும் ஆளுநர் இல்லம் சென்று விஜய் சந்தித்து அவரது சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்து திரும்பியிருக்கிறார்.
அடுத்து என்ன நடக்கும்? ஆளுநர் அர்லேகர், விஜய்யை ஆட்சியமைக்க அழைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துளள்து.
Advertisement
இதற்கிடையே, மற்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நேற்று அரசியல் களமே சுறுசுறுப்பாக இருந்த நிலையில், இன்று அதே காட்சிகள் மந்தகதியில் நடப்பதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. 118 இடங்கள் தேவை என்றபட்சத்தில் 108 இடங்களுடன் தவெக போராடி வருகிறது. பல கட்சிகள் முன் வருவது போல இருந்தாலும் எதுவும் பலனளிக்கவில்லை.
இந்த நிலையில்தான் தொங்குப் பேரவை என்பது பற்றி பலரும் விவாதித்து வருகிறார்கள்.
தொங்குப் பேரவை என்றால் பேரவையில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை எந்த கட்சியும் பெறாமல், குறைந்த பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு மற்ற கட்சிகள் ஆதரவு அளிக்காத நிலையில் தொங்கு பேரவை அமையும் வாய்ப்பு உண்டு.
தொங்கு பேரவை என்பது, முதலில் அதிக இடங்களில் வென்ற கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பார். அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் வழங்கப்படும்.
அதற்குள் மற்ற கட்சிகளின் ஆதரவை பெற வேண்டும். வெளியில் இருந்து ஆதரவு, ஆட்சியில் அதிகாரம் போன்றவகைகளில் இந்த ஆதரவு அமையலாம். பிறகு பேரவையில் ஆட்சியமைக்கத தேவையான பெரும்பான்மையை கட்சி நிரூபிக்கும்.
பெரும்பான்மை நிரூபிக்கப்படாமல் போனால், தேர்தலைத் தவிர்ப்பதற்காக, அடுத்த நிலையில் இருக்கும் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுக்கலாம். அந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும்.
இந்த நிலையில், தொங்கு பேரவை என்பதால், அந்த மாநிலத்தில் மீண்டும் தேர்தல் நடத்தப்படலாம்.