முகப்பு
தமிழ்நாடு

எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது! - ஜோதிமணி

அதிமுகவுக்கு திமுக ஆதரவளிப்பதாக வெளியான தகவல் குறித்து ஜோதிமணி பதிவு...

ஜோதிமணி - கோப்புப் படம்
பகிர்:

அதிமுகவுக்கு திமுக ஆதரவளிக்கும் என தகவல்கள் வெளியாகிய நிலையில் அதுபற்றி ஜோதிமணி பதிவிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்றும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு சட்டப்பேரவை உருவாகியுள்ளது.

தவெகவுக்கு காங்கிரஸ் ஏற்கெனவே ஆதரவு அளித்திருக்கும் நிலையில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவையும் தவெக கோரியுள்ளது. விசிக, இடதுசாரிகள் தங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பான்மை கடிதத்தைக் கொடுத்தால்தான் ஆட்சியமைக்க அழைக்க முடியும் என்று ஆளுநர் கூறி வருகிறார்.

Advertisement

Advertisement

இதனிடையே திமுகவும் அதிமுகவும் தனித்தனியே ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது எக்ஸ் பக்கத்தில்,

"எதிரிக்கு எதிரி நண்பன். ஓகே! எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? வரலாற்றுப் பிழை. தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது" என்று பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியமைக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கும் அல்லது திமுக - அதிமுக கூட்டணி உருவாகலாம் என்று செய்திகள் வெளியாகி வரும் நிலையில் ஜோதிமணி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

summary

Tamil Nadu will never accept DMK - ADMK alliance: Jothimani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments