அதிமுக கூட்டத்தில் 5 உறுப்பினர்கள் மிஸ்ஸிங்! வாழ்த்து சொன்ன பழனிசாமி! பின்னணி என்ன?
அதிமுக கூட்டத்தில் 6 உறுப்பினர்கள் பங்கேற்காத நிலையில் ஆட்சிக்கு வாழ்த்து சொன்னார் பழனிசாமி.
விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இன்று மாலை 4 மணிக்கு தெரிவிப்பதாக விசிக அறிவித்த சில நிமிடங்களில், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் அமையவிருக்கும் ஆட்சிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதற்கு முன்புதான், சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற அதிமுக பேரவை உறுப்பினர்கள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் புதிதாகத் தேர்வான 47 பேரில் 42 பேர் பங்கேற்றிருந்தனர். மற்றவர்கள் எங்கே என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஏற்கனவே, தமிழ்நாட்டில் புதிய அரசு ஆட்சியமைப்பதில் இடியாப்ப சிக்கல் நிலவி வரும் நிலையில், ஒருபக்கம் அதிமுக தலைமையில் ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகவே நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருந்தார்.
Advertisement
இதனால், அதிமுக தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சியமையும் என்றும், அதற்கு திமுக ஆதரவு அளிக்கப்போவதாகவும் கூட பேச்சுகள் எழுந்தன. ஆனால், ஒன்றுமே நடக்காமல் அந்த பேச்சுகள் எழவில்லை என்றும் சில தகவல்களும் பரவி வருகின்றன. திமுக ஆதரவு கொடுக்க மூத்த தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முடிவிலிருந்து பின்வாங்க நேரிட்டதாகவும் உறுதி செய்யப்படாதத்தகவல்கள் தெரிவித்து வருகின்றன.