ஆளுநர் மாளிகையில் விஜய்!
ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க மீண்டும் உரிமை கோரவுள்ள விஜய்!
சென்னை : தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இன்று(மே 9) மாலை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை வழங்கிட தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய் அனுமதி கோரிய நிலையில், அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து, மாலை 6.15 மணியளவில் பட்டினப்பாக்கத்தில் உள்ள தமது வீட்டிலிருந்து ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்ட விஜய் மக்கள் மாளிகையைச் சென்றடைந்தார். அவருடன் ஆளுநர் மாளிகைக்கு தவெக ஆதரவுக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலரும் சென்றிருக்கின்றனர். மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
summary