ஆளுநருடன் விஜய் சந்திப்பு! ஆட்சியமைக்க உரிமை கோரினார்!
ஆட்சியமைக்க உரிமை கோரிய தவெக தலைவர் விஜய்.
தவெக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இந்தச் சந்திப்பின்போது தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெசு உருவெடுத்துள்ள நிலை யில், ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு விஜய் கடிதம் அனுப்பினார்.
Advertisement
இதனிடையே, அவர் வியாழக்கிழமை முதல்வராக பதவியேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு தரப்பில் பதவியேற்பு விழா முன்னேற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர்.
இதில், பதவியேற்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நேரு விளையாட்டு அரங்கில் பதவி யேற்பு விழா நடைபெறகிறது.