முகப்பு
தமிழ்நாடு

நெஞ்சில் குடியிருக்கும்... முதல்வர் விஜய்யின் முதல் உரை!

முதல்வராகப் பதவியேற்ற விஜய்யின் முதல் உரை

முதல்வர் விஜய்யின் முதல் உரை
பகிர்:

முதல்வராகப் பதவியேற்ற விஜய்யின் முதல் உரையில் அவர் பேசியதாவது, "என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றியடைய வேண்டும் என்றிருந்த ஒரு சாதாரணமான உதவி இயக்குநருக்குப் பிறந்த ஒரு பிள்ளையாக, எனக்கும் வாழ்க்கையில் வறுமையில் என்னவென்பது தெரியும், பசி என்றால் என்னவென்பதும் தெரியும். நான் ஒன்றும் பெரிய மன்னர் பரம்பரையிலிருந்து வரவில்லை.

உங்களை மாதிரிதான், உங்கள் குடும்பத்தில் ஒருவன் மாதிரிதான், உங்கள் பிள்ளை மாதிரிதான், உங்கள் அண்ணன் - தம்பி மாதிரிதான் நான் உணர்கிறேன்.

Advertisement

நீங்களும் என்னை அப்படி நினைத்ததால்தான், சினிமாவில் மிகப்பெரிய இடத்தை எனக்குக் கொடுத்தீர்கள். இப்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக அரசியலுக்கு வந்த உங்கள் விஜய்யை 'நீ வா விஜய் பார்த்துக் கொள்வோம்' என்று சொல்லி, அவ்வளவு அன்பாகவும் அவ்வளவு உறவாகவும் என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.

இந்த நேரத்தில் இதனை நான் சொல்லியாக வேண்டும். இந்தப் பயணத்தில் எவ்வளவோ கஷ்டங்கள், அவமானங்கள் இருந்தாலும், என்னுடன் இருந்த உங்களுக்கும் ஏற்பட்ட கஷ்டங்களும் அவமானங்களையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், என்னுடைய வலிகளையும் வேதனைகளையும் உங்களுடையதாக நினைத்துக் கொண்டு, என் கூடவே நின்று, இன்று 'சி. ஜோசப் விஜய் எனும் நான்' என்பதை உண்மையாக்கியிருக்கிறீர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.