தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக கருப்பையா பதவியேற்பு!
தமிழக சட்டப்பேரவை தற்காலிக தலைவராக கருப்பையா இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்டது குறித்து..
தமிழக சட்டப்பேரவை தற்காலிக தலைவராக கருப்பையா இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்டார்.
சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருப்பையா தற்காலிக சட்டப்பேரவை தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னதாக பெரியார் திடலில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு வந்த விஜய், ஆளுநர் அர்லேகருக்கு பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை போர்த்தினார்.
Advertisement
பின்னர் வந்தே மாதரம் பாடலுடன் சட்டப்பேரவைத் தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது. தவெக சார்பில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருப்பையாவுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
தமிழகத்தின் 13 வது சட்டப்பேரவை நாளை கூடவுள்ள நிலையில், தற்காலிக பேரவைத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். தவெக ஆட்சியில் இடம்பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்கவுள்ளனர்.
இவர்களுக்கு தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்துவைக்கவுள்ளார். தமிழகத்தின் 13வது முதல்வராக சி. ஜோசப் விஜய் இன்று பதவியேற்றுக்கொண்ட நிலையில், அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.