தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக கருப்பையா பதவியேற்பு!
தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்டது குறித்து..
தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்டார்.
சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருப்பையா தற்காலிக பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக பெரியார் திடலில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு வந்த விஜய், ஆளுநர் அர்லேகருக்கு பூங்கொத்து கொடுத்து, பொன்னாடை போர்த்தினார்.
Advertisement
Advertisement
பின்னர் வந்தே மாதரம் பாடலுடன் சட்டப்பேரவைத் தலைவர் பதவியேற்பு விழா தொடங்கியது. தவெக சார்பில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருப்பையாவுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
தமிழகத்தின் புதிய சட்டப்பேரவை நாளை கூடவுள்ள நிலையில், பேரவையின் தற்காலிகத் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். தவெக ஆட்சியில் இடம்பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்கவுள்ளனர்.
இவர்களுக்கு பேரவையின் தற்காலிகத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்துவைக்கவுள்ளார். தமிழகத்தின் முதல்வராக சி. ஜோசப் விஜய் இன்று பதவியேற்றுக்கொண்ட நிலையில், அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.
Karuppiah Sworn In as Interim Assembly Speaker
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.