முதல்வர் விஜய்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
எம்எல்ஏவாகப் பதவியேற்ற பின் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி...
சட்டப்பேரவையில் திமுக கூட்டணிக்கு ஆதரவாகவே வாக்களிப்பேன் என்றும் முதல்வர் விஜய் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதல்முறையாக இன்று எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்ற பின் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த பிரேமலதாவுக்கு, விஜய்யும் எழுந்து நின்று வாழ்த்து கூறினார்.
இதன்பின்னர் பேரவைக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய பிரேமலதா,
Advertisement
Advertisement
"என்னுடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாகவே நான் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன். அதன்படியே பேரவையில் திமுக கூட்டணிக்கு ஆதரவாகவே நான் வாக்களிப்பேன்.
முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கும் தம்பி விஜய்க்கு கேப்டன் சார்பாக, தேமுதிக சார்பாக வாழ்த்துகள். நேற்று தானே பதவியேற்றிருக்கிறார். கட்டாயம் அவருக்கான நேரத்தை நாம் தருவோம். அண்ணன் ஸ்டாலினும் அதைத்தான் சொல்லியிருக்கிறார்.
அதன்பிறகு மக்கள் பிரச்னைகளை, தமிழ்நாட்டின் பிரச்னைகளைப் பற்றி பேசுவோம். தமிழகத்திற்காகவும் தமிழக மக்களுக்காகவும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம்.
வரும் நாள்களில் என்னென்ன மாற்றங்கள் வருகிறது என்பதைப் பார்த்து செயல்பாடுகள் இருக்கும்" என்றார்.
Chief Minister Vijay should be given time: Premalatha Vijayakanth
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.