முகப்பு
தமிழ்நாடு

பள்ளி மாணவரைக் கொன்ற சக மாணவர்கள்! சேலத்தில் பயங்கரம்

சேலத்தில் பள்ளி மாணவரைக் கொன்ற சக மாணவர்கள் பற்றிய தகவலால் பதற்றம்.

பள்ளி மாணவர் - file photo
பகிர்:

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை அடுத்த காட்டுவளவு பகுதியில், மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒரு மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோகுல் என்ற மாணவரை, சக மாணவர்கள் சரமாரியாக கத்தியால் குத்தியதாகவும், அதனை ஒருமாணவர் படம்பிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மற்றொரு தகவலில், கொலை செய்த மாணவர்கள் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

கொலை செய்யப்பட்ட கோகுலும், இந்த மாணவர்களும் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டு, அது கொலையில் முடிந்திருப்பதாகவும், பள்ளி மாணவர்களிடையே போதைக் கலாசாரம் பரவி வருவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments