பள்ளி மாணவரைக் கொன்ற சக மாணவர்கள்! சேலத்தில் பயங்கரம்
சேலத்தில் பள்ளி மாணவரைக் கொன்ற சக மாணவர்கள் பற்றிய தகவலால் பதற்றம்.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை அடுத்த காட்டுவளவு பகுதியில், மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒரு மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோகுல் என்ற மாணவரை, சக மாணவர்கள் சரமாரியாக கத்தியால் குத்தியதாகவும், அதனை ஒருமாணவர் படம்பிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
மற்றொரு தகவலில், கொலை செய்த மாணவர்கள் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
Advertisement
கொலை செய்யப்பட்ட கோகுலும், இந்த மாணவர்களும் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டு, அது கொலையில் முடிந்திருப்பதாகவும், பள்ளி மாணவர்களிடையே போதைக் கலாசாரம் பரவி வருவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.