கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை
கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே ஆலப்பட்டி என்ற கிராமத்தில் அரை கி.மீ இடைவெளியில் இரு இளைஞர்களின் சடலங்கள் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது
நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் இரு இளைஞர்களும் ஒரே பாணியில் பெட்ஷீட் சுற்றி, பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இரு சடலங்களையும் மீட்ட போலீஸார் கூராய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் இரு இளைஞர்களும் வேறு எங்கோ கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
வேறு எங்கோ கொலை செய்து சடங்களை வீசி சென்ற மர்ம கும்பல் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
The incident where two youths were burnt to death near Krishnagiri has caused a huge sensation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.