முகப்பு
தமிழ்நாடு

புயல் சின்னம்: அடுத்த 2 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது குறித்து...

மழை - (கோப்புப்படம்)
பகிர்:

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, அடுத்த 2 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை பெய்யவுள்ளது.

வடக்கு இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அதே பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும்.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் மையத்திலிருந்து தெற்கு லட்சத்தீவு பகுதிகள் வரை, தென் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

Advertisement

இதனால், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஏற்பட்டிருக்கும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக, தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (மே 12) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு(காலை 10 மணி வரை) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Due to a low-pressure area formed in the Bay of Bengal, rain is expected in four districts over the next two hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.